1993 –ல் நடந்த மும்பாய் குண்டு வெடிப்பு தொடர்பில் 4 முன்னால் போலீசஸ்காரர்களுக்கும் 6 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது பம்பாய் தடா நீதிமன்றம்.
அசோக் முனிஸ்வர், பல்ஷிகர், மாலி மற்றும் மகாதிக் ஆகியோருக்கு 4 வருடம் கடுங்காவலும், ரூ 25000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது பம்பாய் தடா நீதிமன்றம். குண்டு வெடிப்பு தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு தண்டனை அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
1993 மார்ச் 12-ம் தேதி பம்பாயில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்தனர்.
வெடிபொருட்கள் ஏற்றி வந்த லாரியை சரியாக சோதிக்காமல், அனுமதித்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 7 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் ஏற்றி வந்ததற்காக, நிழல் உலக தாதா அபு சலீமின் கூட்டாளி மற்றம் நடிகர் சஞ்சய் தத்துடன் குற்றம் சாட்டப்பட்டவனுமான மன்சூருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இவன் சஞ்சய் தத் இடத்திலிருந்து, அபு சலீம் உத்தரவின் பேரில் வெடிபொருட்களை லாரியில் ஏற்றி கொண்டு சென்றவன்.
சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஏகே 56 துப்பாக்கியை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கியை கொடுத்தது அபு சலீம். சஞ்சய் தத் ஏற்கனவே 18 மாதம் சிறையில் இருந்துருக்கிறார். பின் சஞ்சய் தத் குற்றவாளி ஆனால் தீவிரவாதி அல்ல என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
பணமும் அதிகாரமும் நன்கு விளையாண்டிருக்கிறது. இவரின் சகோதரி பிரியா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.
ஆமாம் சஞ்சய் தத்திற்கு தண்டனை என்னவாயிற்று. அப்படியே விட்டு விடுவீர்கள் என்பது நீங்கள் தீர்ப்பை இழுக்கும் போதே தெரிகிறதே.
போலீசஸ்காரர்கள்தான் இலிச்சவாயர்கள். ஏன் நீங்கள் நீதிபதியை கவனிக்க வில்லையா?
Monday, July 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment