இந்தியாவின் பொருளாதரத்தை உயர்த்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சுமார் ஒரு கோடி பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2006-ல் மட்டும் 25.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணத்தை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார்கள். இது இந்தியாவிற்கு, வருமான வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம். இந்தியாவிற்கு வரும் நேரடி வெளிநாட்டு முதலீட்டைவிட 3 மடங்கு அதிகம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
Monday, October 29, 2007
Subscribe to:
Posts (Atom)