Saturday, July 28, 2007

இந்தியாவில் மக்கள் மீது தொடரும் துப்பாக்கிச் சூடு ஜனநாயகம்.

ஜூலை 28, ஆந்திராவில் கம்பம் மாவட்டத்தில் மோனுகொண்டாவில், மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண், 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

சிபிஐ-எம் சார்பில் நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பந்த நடந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண், 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சிபிஐ-எம், ஆந்திரா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளது.

கடந்த மார்ச் 14-ம் தேதி சிபிஐ-எம் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் நந்திகிராமத்தில், டாடாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மக்களை சுட்டுக் கொல்வதில் அரசியல் கட்சிகளிடையே எந்த கொள்கை வேறுபாடும் கிடையாது.

No comments: